Admin-message எமது தளத்துக்கு வருகை தரும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் உங்கள் வருகையை நினைவூட்ட இங்குள்ள Facebook பகுதியில் உள்ள Like ஐ கிளிக் பண்ணுமாறுஅன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.** உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள் என்றும் முன்னிலை உங்கள் அபிமானத்துடன் **உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவளி> Rajaratamediaஎன டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT airtel,hutch அனுப்புங்கள்,*** உங்கள் செய்திகளை நீங்களும் அனுப்பலாம் செய்திகள் விளம்பரங்கள் அனைத்தையும் அனுப்ப வேண்டிய Email:Rajaratanews1st@gmail.com SMS 0717548338- call: 0717548338 Admin-message
Headlines
Admin-message
Published On: 2:00 PM

214 ஓட்டங்களால் இந்தியா படுதோல்வி : தொடரைக் கைப்பற்றியது தென்னாபிரிக்கா

இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 214 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

மும்பையில் நடைபெற்ற இன்றைய போட்டியில் முதலில் துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 438 ஓட்டங்களைப் பெற்றனர்.

அவ்வணியின் அம்லா 23 ஓட்டங்களையும், டீ கொக் 109 ஓட்டங்களையும், டூ ப்லெஸிஸ் 133 ஓட்டங்களையும், அணித்தலைவர் டி வில்லியஸ் 109 ஓட்டங்களையும் குவித்தனர்.

439 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் ஏமாற்றத்தையே கொடுத்தனர். அவ்வணி சார்பாக ரோகித் சர்மா, 16 ஓட்டங்களுடனும், கோலி 7 ஓட்டங்களுடனும் ஆட்மிளந்தனர்.

எனினும் சற்று பங்களிப்பு செய்த தவான், 60 ஓட்டங்களையும் ரகானே 87 ஓட்டங்களையும் டோனி 27 ஓட்டங்களையும் பெற்றனர. ஏனைய வீரர்கள் எவரும் பிரகாசிக்கவில்லை. பின்னர் 36 ஓவர்கள் முடிவில் இந்தியா அணி 214 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது.

தென்னாப்பிரிக்கா அணி சார்பில் ரபாடா 4 விக்கெட்டுக்களையும், ஸ்டெயின் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார்கள். இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை தென்னாபிரிக்கா 3-2 என்ற வித்தியாசத்தில் கைப்பற்றியுள்ளது. இன்றைய போட்டியின் ஆட்ட நாயகனாக டீ கொக்கும், தொடர் நாய்கனாக டி வில்லியஸும் தெரிவானார்கள்.
Share this article :


Related News
முக்கிய குறிப்பு: அநுராதபுரநிவுஸ் இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு அநுராதபுரநிவுஸ் நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு அநுராதபுரநிவுஸ் நிர்வாகத்துடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள்!!!
- நிருவாகம் -

0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். :

 

Sign Up to Aththatchi Newsletter

© 2016 ATHTHATCHI NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 75 48 33 8